மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை

Publisher: ,
Author:

100.00

மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை

100.00

Malaysia Indhiyath Thamizhargalin Avala Nilai

 

இந்த நூல் காலனிய ஆதிக்கம் எப்படி, கொடுமையாக, அப்பட்டமான சுயநலத்துடன் தன் அதிகார வெறிக்குத் தீனிப்போட இந்தியத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியது என்பதைக் காட்டுகிறது. பீகிங்கில் நிகழும் படுகொலைகளிலிருந்து பிரிட்டிஷ் தூதுவர்கள் பாதுக்காக்கப்பட இந்தியர்களை அனுப்பலாம்; சோமாலியாவில் சண்டை போட இந்தியர்களை அனுப்பலாம்; ஏடன்- தீன் சீன் நிலக்கரிச் சுரங்கங்களைப் பாதுகாக்க வேண்டுமா… இந்தியர்களைத் தரலாம். உகாண்டாவிலோ சூடானிலோ ஒரு ரயில் பாதையைக் கட்ட வேண்டுமா? அந்த பிரிட்டிஷ் கம்பெனிக்கு சிறந்த தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து கிடைப்பார்கள்…. இப்படிப் பட்டியலிட்டு பேசியது இந்தியாவின் பிரிட்டிஷ் வைஸிராயாக இருந்த கர்ஸான் லண்டனில் உள்ள கில்டுஹாலில் ஆற்றிய உரையில்.

உள்நாட்டில் பஞ்சம். பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்திய பஞ்சம். விளைவாக கப்பல் கப்பலாக, கொத்தடிமைகளாக, இந்தியர்கள் காலனியப் பிரதேசங்களில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் உள்கட்டமைப்புகளை உருவாக்க அனுப்பப்பட்டார்கள். அப்படி வந்தவர்கள்தாம் இன்று மலேசியாவில் வாழும் பெரும்பாலான தமிழர்கள். ஆனால் மலேசியா என்கிற தேசத்தின் புராதனப் பண்பாட்டை மிகத் தொன்மையான காலத்தில் பின்சென்று நோக்கினால் அதன் வேர்களும் தமிழர்களிடம் இருந்து வந்தவையாக இருக்கும் என்பதுதான் வேதனையான வரலாற்று உண்மை. கிராமம் கிராமமாகப் பிடுங்கப்பட்டு மலேசியாவில் தூக்கி வீசப்பட்ட தமிழர்கள் தங்கள் பண்பாட்டை அங்கே அணுஅணுவாக மீட்டுருவாக்கம் செய்தார்கள்.  விழாக்காலங்களில் தாங்கள் வாழும் இடங்களின் முன்பகுதிகளை மாவிலைத் தோரணங்களால் அலங்கரிப்பார்கள்; தைப்பூசத்தன்று சுங்கோபுலோவில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்திற்கு தரிசனத்துக்குச் செல்வார்கள்….  மலேயாவில் வாழும் இந்தியர்கள் எப்பொழுதும் தங்கள் தாயகத்தின் பாதிப்பை தங்களுள்ளே கொண்டிருந்தார்கள். ஆனால் அரசியல் ரீதியாக இந்திய வம்சாவளியினர், அவர்களுக்கொப்பக் குடியேறிய சீனர்களைக் காட்டிலும் தாமதமாகவே விழிப்புணர்வடைந்தார்கள். சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்திற்கு இந்தத் தென்கிழக்காசிய நாட்டுத் தமிழர்கள் அளித்த பங்கு மகத்தானது முக்கியமானது.

Delivery: Items will be delivered within 2-7 days