மனிதனுக்குள் ஒரு மகா சக்தி!

Publisher:
Author:

100.00

மனிதனுக்குள் ஒரு மகா சக்தி!

100.00

ஆன்மாவும் உயிரும் ஒன்றா, வெவ்வேறா? ஆன்மா உடலில் எங்கே அமைந்துள்ளது? இதயத்திலா? உடல் முழுதிலுமா? இப்படி அநேகக் கேள்விகளுக்கு இன்றளவும் விடை காணப்படாமல் உள்ளது. ஆனால், ஆத்மசக்தியும் குண்டலினி சக்தியும் ஒன்றே என தாந்த்ரீக நூல்கள் கூறுகின்றன.

இந்தக் குண்டலினி சக்தியல்லவா ஒவ்வொருவருக்கும் ஒரு ஒப்பற்ற திறமையை, தனித்தன்மையைத் தந்திருக்கிறது!

யோகிகளும் சித்தர்களும் நீர்மேல் நடப்பது, நெருப்பில் கிடப்பது, கூடுவிட்டு கூடு பாய்வது, ஏக காலத்தில் இருவேறு இடங்களில் இருப்பது இப்படி எத்தனையோ அற்புதங்களை செய்திருக்கிறார்கள். அவர்கள் அடைந்த அட்டமாசக்திகளுக்கு மூல சக்தி குண்டலினியே ஆகும். தங்களுக்குள் இருக்கும் சக்தியை முழு அளவில் எழுப்பி உச்சந்தலைக்கு ஏற்றியதாலன்றோ அவர்களுக்கு எதுவும் சாத்தியமாயிற்று!

குண்டலினி சக்தியை எப்படி கிளர்ந்தெழச் செய்வது? தீவிர பக்தி, தியானம், யோகம் மந்திர உபாசனை இவற்றில் எதைக் கொண்டும் குண்டலினியை விழிக்கச் செய்யலாம்.

இப்பிரபஞ்சத்தில் இன்னும் அறியப்படாத இரகசியங்களை அறியத்தானே நாம் பிறந்திருக்கிறோம். நமக்குள் சக்தி இருக்கிறது நாம் முயன்றால் அடைய முடியாதது எதுவும் இல்லை.

உள்ளிருக்கும் சக்தியை உணர்வோம், இன்னும் பல உயரங்களைத் தொடுவோம்.

பி.எஸ்.ஆச்சார்யா

Delivery: Items will be delivered within 2-7 days