மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்

Publisher:
Author:

150.00

மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்

150.00

நான் பல ஊர்களில், நகரங்களில், பல நாடுகளில் பயணிக்கும்போது என்னைச் சந்தித்து, “ நான் விஐடி மாணவன் சார் “ என்று பலரும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். “ எங்கு வேலை செய்கிறீர்கள்? “ என்று கேட்டால் ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அந்த நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பதாகச் சொல்வார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்; பெருமையாக இருக்கும். இதற்க்கு மூலகாரணமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நான் நன்றியுடன் நினைக்க என்றும் மறந்ததில்லை.

விஐடி என்ற பிரம்மாண்டம் – அந்த விருட்சம் – அந்த ஆலமரம் தழைத்து எல்லோருக்கும் வாழ்வளிக்க காரணம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். விதைத்த விதைதான். அவர் ராசி அப்படி. அவர் தொட்டது துலங்கும், வாழ்வு மலரும்; அப்படிப்பட்ட நல்ல உள்ளத்துக்குச் சொந்தக்காரர் அவர்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஏராளமான தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் என இருப்பதற்குக் காரணம் எம்.ஜி.ஆர்.தான் !

– ஜி.விசுவநாதன்

Delivery: Items will be delivered within 2-7 days