பெருஞ்சுவருக்குப் பின்னே

Publisher:
Author:

Original price was: ₹120.00.Current price is: ₹115.00.

பெருஞ்சுவருக்குப் பின்னே

Original price was: ₹120.00.Current price is: ₹115.00.

ஜெயந்தி சங்கரின் ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ நூலின் தலைப்பே சீனப்பெருஞ்சுவரினை நினைவுபடுத்துவதோடு பெருஞ்சுவருக்குப் பின்னே நிகழ்ந்திருப்பது என்ன என்ன என்பதை வாசித்தறியும் ஆர்வத்தினை தூண்டுவதாகவும் உள்ளது.
‘சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்’ எனும் சிறு தலைப்பு நூலின் சாரம்சம் இதுதான் என்பதனை கோடிட்டுக் காட்டி விடுகிறது. பெண்களின் வாழ்க்கையே சுவருக்குப் பின்னேயான வாழ்க்கையாய் அடைபட்டு விடுவதை சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் நூலில் அப்பட்டமாக அப்படியே காட்டப்பட்டுள்ளது.
சீனப் பெண்களின் வாழ்க்கைநிலை குறித்து தமிழுக்கு முற்றிலும் புதுமையானதொரு நூல் இது. ஜெயந்தி சங்கரின் இந்நூல் உயிர்மை வெளியீடாக 192 பக்கங்களில் வெளிவந்துள்ளது. 37 தலைப்புகளில் நூலாசிரியர் கட்டுரைகளை அளித்துள்ளார்.
கட்டுரைகள் அனைத்தையும் மெனக்கெட்டு தன்னார்வத்துடன் ஆய்வுரீதியில் கொடுத்துள்ளார். 

Delivery: Items will be delivered within 2-7 days