சத்தியத்தின் ஆட்சி – காந்திய ஆளுமைகளின் கதைகள்

Publisher:
Author:

165.00

சத்தியத்தின் ஆட்சி – காந்திய ஆளுமைகளின் கதைகள்

165.00

 

சேவையுணர்வு என்பது ஏதோ செய்யவேண்டும் என்னும் எண்ணத்தில் எழுவதல்ல. கடமை என நினைத்து ஆற்றப்படும் செயலுமல்ல. படித்தல், எழுதுதல் போல ஒருவருடைய குணமாகவே அது அமையவேண்டும். அப்போதுதான் சேவையாற்றுவதால் உருவாகும் நிறைவையும் இன்பத்தையும் ஒருவரால் உணரமுடியும். ஒரே நேரத்தில் வழங்குபவருக்கும் பெறுகிறவருக்கும் நிறைவை அளிக்கும் மகத்தான செயல் சேவை மட்டுமே என்பது காந்தியடிகளின் கூற்று. காந்தியடிகளைப் பின்பற்றிய அவருடைய தொண்டர்கள் அனைவரும் காந்தியடிகளின் கூற்றுக்குச் சாட்சியாக வாழ்ந்தவர்கள். மிகநீண்ட பட்டியலைக் கொண்ட அந்த ஆளுமைகளின் வரிசையில் ஒரு சிலருடைய வாழ்க்கைச்சித்திரங்கள் மட்டுமே இத்தொகுதியில் உள்ளன. அவை வாழ்க்கைச்சித்திரங்கள் மட்டுமல்ல. இன்னொரு கோணத்தில் மக்களுக்கு அவர்கள் ஆற்றிய சேவைச்சித்திரங்கள் என்றும் சொல்லலாம்.

 

Delivery: Items will be delivered within 2-7 days