1 review for சிலப்பதிகாரம் மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட உண்மையும்
Add a review
You must be logged in to post a review.
₹100.00
Out of stock
சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு கிடைத்த மரண தண்டனை சாமானிய மக்களின் மேல் ஆளும்வர்க்கம் கொண்ட போக்கைக் காட்டுகிறது. ஆனால் மன்னன் தவறு செய்தால் பாவை என்ற பூதம் சுட்டிக்காட்டி அழும். ஆனால் தண்டிக்காது. மன்னருக்கு ஒரு நீதி மக்களுக்கு ஒரு நீதி கண்ணகியின் கோபத்தை தணிக்க ஆயிரம் பொற்கொல்லர்கள் கொல்லப்பட்டதைக் கூறும் அதிர்ச்சித் தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. என்னுள் சிலப்பதிகாரத்தை வேறு கோணத்தில் ஆராய்கிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
Art Nagarajan –
மறுக்கப்பட்ட நீதியும்
மறைக்கப்பட்ட உண்மையும்!!
வே. பெருமாள்சாமி
பாரதி புத்தகாலயம்.
சிலப்பதிகாரம் மறுவாசிப்பு
சிலப்பதிகாரத்தில்
கோவலனுக்கு
பாண்டிய மன்னன்
விதித்த மரண தண்டனை, சாமான்ய மக்கள் மேல்
ஆளும் வர்க்கம் கொண்ட ஆதிக்கப் போக்கையே காட்டுகிறது
என்கிறது இந்த நூல்.
சிலம்பையே
திருடியிருந்தாலும்
திருடியவனுக்கு
மரணம்தான் தண்டனையா!
கண்ணகியின்
கோபத்தை தணிக்க
வெற்றிவேல் செழியன்
என்ற பாண்டிய மன்னன்
ஆயிரம் பொற்கொல்லர்களை கொலை செய்துவிட்டு கண்ணகியின்
கோபம் தணிந்தது
என்று கூறியது சரியா!
பாண்டிய மன்னர்கள் மீது கண்ணகி சுமத்திய
குற்றச்சாட்டை பொற்கொல்லர்கள் மீது மடைமாற்றம் செய்த
அதிர்ச்சித் தகவல்களை
தக்க ஆதாரத்துடன்
இந்தநூல் குறிப்பிடுகிறது!
சோழ பேரரசில் செல்வக்குடியினரும், சீமான்களும் நோயுற்றால்,
நோய் தீர்க்க
ஆயுர்வேத வைத்தியர்களை அருகில்வைத்து
நோயை குணமாக்கி பயனடைந்தார்கள் என்றும்,
ஏழை எளிய
உழைக்கும் மக்கள் நோய்வாய்ப்பட்டால்
இலஞ்சி மன்றத்திலும்,
நெடுங்கல் மன்றத்திலும்
இருந்த
நெடிய கல்தூனைச்
சுற்றிவந்து
“நன்னீர்” பொய்கையில்
மூழ்கி தொழுதால்,
நோய் நீங்கி
நலம் பெறுகிறார்கள்
என்று சிலப்பதிகாரம்
கூறுவதாக
இந்த நூல் கூறுகிறது!
அதற்காகவே
இரு மன்றங்களும்
இலவச
வைத்தியசாலைகளாக இயங்கினவாம்!
மன்னராட்சியில்
மக்கள் நல்வாழ்வுக்கான
ஏற்பாடு
இவ்வளவு தான்போல!
அரண்மனை ஆட்கள், செல்வந்தர்கள்
தவறு செய்தால்
அதைப் பார்த்து கண்டிப்பதைக்கூட
செய்யாமல்
கண்ணீர் உகுப்பது மட்டுமே
“பாவை மன்றத்து பூதம்”
செய்யும் வேலை
உழைக்கும் மக்கள்
தவறு செய்தால்
கொலை செய்து
தண்டிப்பதற்கு
“வெள்ளிடை பூதம்”
இருந்தது!
ஆயிரம் பொற்கொல்லர்களை
கண்ணகியின் பேரால்
கொன்று குவித்த
மதுரை
வெற்றிவேல் செழியன் என்ற பாண்டிய மன்னன்,
அரசர்கள் மீது
விழுந்த பழியை துடைக்கவே
கண்ணகியை
துர்தேவதையாக
காண்பித்தான் என்கிறது இந்தநூல்.
மேலும்,
சோழர்கள் காலத்தில்தான்
உலகிலேயே
முதன்முதலாக
நடன மங்கையர்களை
விலை கொடுத்து வாங்கி
உறவுகொள்வதை
அங்கீகரித்து
விலைப்பட்டியல்
(Rate Card)
போடப்பட்டு
(ஆயிரத்தெட்டு பொற்கழஞ்சு )
மன்னர் ஆணையிட்டதை
காணமுடிகிறது.
காவிரி பூம்பட்டினத்து
கடற்கரை வணிக வீதியில்
மாதவி ஏலம் விடப்பட்டதை
இந்த நூல்
ஆவணப்படுத்துகிறது!
இன்னும் இதுபோன்ற
ஏராளமான,
அறிவுப்பூர்வமான
கேள்விகளை
இந்த நூல் எழுப்புகிறது!
அனைவரும்
வாசிக்கவேண்டிய நூல்!
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்
புத்தக வாசல், மதுரை
13.06.2020.