வைகை நதி நாகரிகம் : கீழடி குறித்த பதிவுகள்

Publisher:
Author:

210.00

வைகை நதி நாகரிகம் : கீழடி குறித்த பதிவுகள்

210.00

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையைச் சுற்றியும், வைகை நதிக் கரையிலும் நடைபெற்ற கீழடி அகழ் ஆய்வில் காலம் மறைத்துவைத்திருந்த அரிய பொக்கிஷங்கள் ஆச்சரியப்படத்தக்கவகையில் கிடைத்துள்ளன. இந்த அகழாய்வு, அதில் கிடைத்த பொருள்கள், அவை ஏற்படுத்தும் பிரமிப்புகள் குறித்து நூலாசிரியர் எழுதிய கட்டுரைத் தொடரின் தொகுப்பே இந்நூல். மேலும், கீழடி அகழாய்வு குறித்து சில இதழ்களில் வெளியான அவரது கட்டுரைகளும், நேர்காணல்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
தேனூரில் கிடைத்த தங்கக் கட்டிகள், கடை சிலம்பு ஏந்தல் என்னும் கடச்சனேந்தல் கிராமத்தில் கோவலன் -கண்ணகி கடைசியாக வாழ்ந்த வீடு, வெம்பூர் குத்துக்கற்கள் வரிசை என கட்டுரைகள் ஒவ்வொன்றும் வரலாற்று நாவலுக்குரிய சுவையான நடையோடு படைக்கப்பட்டுள்ளதால் நம்மை அந்தக் காலத்துக்கே இட்டுச் செல்கின்றன. அவற்றுக்கு ஓவியங்களும், அகழாய்வுப் படங்களும் உதவிசெய்கின்றன.
மண்ணுக்குள் பரவிக்கிடக்கும் தமிழர்தம் தொன்மையான நாகரிகத்தை வெளிக்கொணர்வதில், கண்ணுக்குத் தெரியாமல் விரவிக்கிடக்கும் பல்வேறு நுட்பமான “அரசியல்’ வலைப்பின்னல்களையும், அதுகுறித்த தமது ஆதங்கத்தையும் துணிச்சலுடன் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

நன்றி – தினமணி

Delivery: Items will be delivered within 2-7 days