யாரால்? யாரால்??

Publisher:
Author:

5.00

யாரால்? யாரால்??

5.00

மீனாட்சிபுரம் மதம் மாற்ற சம்பவங்கள் போன்றவற்றிலும் பெரியாரையும், அண்ணாவையும், தலைவர் கலைஞரையும், தொடர்பு படுத்தியும், அவர்கள் மீது அவதூறுகளை அள்ளித் தெளித்தும் ஏகடியாக எழுதுவதற்கு ‘சோ’ போன்ற எழுத்தாளர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

மீனாட்சிபுரம் மதமாற்றம் போன்ற சம்பவங்களுக்கு அடிப்படை என்ன என்பதை உணர்ந்து கொள்ளும் மனம் இல்லாமல், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், ஆகியோரை பழித்தும் இழித்தும் எழுதிவரும் ‘சோ’ போன்றவர்களுக்கு, ஆதாரப்பூர்வமாக ஆண்டாண்டு காலமாக அழுத்தப்பட்ட சமுதாய மக்களின் மனக் குமுறலை எதிரொலிக்கும் வகையில்- தலைவர் கலைஞர் அவர்கள் ‘முரசொலி’ இதழில் தமது கடிதங்கள் வாயிலாக அளித்துள்ள விளக்கங்கள்தாம் இச்சிறு நூல்.

வர்ணாஸ்ரம தர்மத்தின் அடிப்படையை அணுகாமலே, மதமாற்ற சம்பவங்களை பற்றி மனம் போனவாறு கருத்தறிவித்து கொண்டிருக்கும் ‘சோ’ போன்றவர்களுக்கு பதில் சொல்லவும், மக்களுக்கு சுயமரியாதை உணர்வூட்டவும் முற்படும் அனைவருக்கும் இந்நூல் அற்புதக் கேடயம். அரிய படைக்கலன்.

Delivery: Items will be delivered within 2-7 days