அரங்கில் வெடித்த சொற்கள் (தொகுதி-5)

Publisher:
Author:

100.00

அரங்கில் வெடித்த சொற்கள் (தொகுதி-5)

100.00

கவிஞன் என்பவன் சமூகத்தின் விளை பொருள். ஒரு நல்ல கவிதைக்குக் கிடைக்கும் வரவேற்பு ஒரு சமூகத்தின் நுண்ணுணர்வுக்கான அளவுகோல், அந்த வகையில், காலங்காலமாகக் கவிதை, பாடிக் கொண்டிருக்கும் தம்பி கவிபாஸ்கர் தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு வரம்.

தம்பி கவிபாஸ்கர் அவர்கள் எல்லா மனித உறவுகளையும் நேர்த்தியோடும் கத்திக் கூர்மையோடும் (Sharp and Perfect) கச்சிதமான பொருள் உணர்த்தும்படி பாடல் எழுதுவதில் வல்லவர். மொழியைச் சுண்டக் காய்ச்சி வடிக்கத் தெரிந்தவர்.

கவிதைக்குள் சுருக்கென்று தைக்கும் வார்த்தைகளை நறுக்கென்று வடிக்கும் சிற்பி. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் அபூர்வமான பொருள்படும் ஒரு சொல்லை இட்டு அசத்துகிற மேலதிக மொழிப்புலமை பெற்ற திறமையாளன்.

தம்பியின் கவிதைகளில் புதிய திறப்புகளுக்கான சாவிகள் நிறையவே இருக்கும். அவன் மேடையில் கவிபாடினால் அரங்கம் கைத்தட்டலில் அதிரும், சிசுப்புச் சிந்தனையால் கவிதைக்குச் சிறகு முளைக்கும், வார்த்தைக்கு வார்த்தை தமிழ்த்தாய் நின்று சாட்டை சொடுக்குவாள்.

– இயங்குநர் மு.களஞ்சியம்

Delivery: Items will be delivered within 2-7 days