தி.மு.க. – சமூகநீதி

Publisher:
Author:

25.00

தி.மு.க. – சமூகநீதி

25.00

வழக்கறிஞர் தம்பி திரு. கே.எஸ்.ராதாகிருஷ்ணன், “திமுக. – சமூகநீதி” என படைத்துள்ள இந்த அருமையான நூல் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் காஞ்சியில் வெளியிடப்படுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சமூக நீதியின் தாயகம் தமிழகம் என்பதை இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழகத்தில் வாழும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை, அவர்களின் நலிந்தவர்களை, நசுக்கப்பட்ட அவர்களை முன்னேற்றுவதற்கு திராவிட இயக்கம் கண்ட அருமருந்து சமூகநீதி, அந்த சமூக நீதியை வென்றெடுப்பதில் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் நடேசனார், முத்தையா முதலியார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஆகியோரும் அவர்களைத் தொடர்ந்து இன்றைய தி.மு.கழகமும் மேற்கொண்ட மேற்கொண்டு வரும் முயற்சிகளை போராட்டங்களை எல்லாம் தம்பி திரு.கே.எஸ். ராதாகிருஷ்ணன் நூலில் தெளிவாக தொகுத்துத் தந்துள்ளார்.
அவருக்கு என் பாராட்டுகள் வகுப்புவாரி பிரதிநிதித்துவ போராட்ட வரலாற்றை விளக்கும் இந்நூல் வருங்காலத் தலைமுறையின் சமூக நீதி சிந்தனைகளுக்கு விருந்து படைத்திட, சமூகநீதி போல் முழுமையடைய தக்க வகையில் விழிப்புணர்வு புகட்டிட வாழ்த்துகிறேன்.

தலைவர் கலைஞர்

Delivery: Items will be delivered within 2-7 days